Friday, 25 April 2014
அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை
முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.
மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.
ஓரு மகன் சொன்னான். “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”
வியாபாரி கேட்டான். “எப்படி?”
“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”
இன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”
வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?”
“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது ந்ன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”
வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.
மூன்றாம் மகன் சொன்னான். “நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”
வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான். “எப்படி?”
“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன். அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலா என்று மடாலயத் தலைவர் கேட்டார். நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும், அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”
அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.
மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். விதி சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.
அந்த வியாபாரியின் மகன்கள் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது புத்திசாலித்தனமான செயல். நாமும் நாம் இருக்கும் அந்த மோசமான சூழ்நிலைக்குத் தீர்வே இல்லை என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் ஏதாவது செய்து நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று தீர்மானிப்பதுவே அறிவு.
முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள்
முயற்சிகளே உதாரணம். ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படா விட்டால் வேறெதற்காவது பயன்படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது. புத்த பிக்குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்பு பயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.
ஆனால் இந்த இரண்டு மகன்களுடைய முயற்சியாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.
மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்குகளுக்குப் பயனில்லா விட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனையைத் தான் செய்தான். அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசியாக மாற்றி விற்பனை செய்தான். அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல. புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள் தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.
ஒரு சூழ்நிலையை ஒரே நேர்கோணத்தில் பார்ப்பது இரண்டு சீப்பு விற்ற மகனைப் போல அற்ப விளைவுகளையே ஏற்படுத்தும். பார்வையை சற்று விரிவுபடுத்தி வேறு கோணங்களிலும் சிந்தித்து செயல்படுவது பத்து சீப்பு விற்றவன் முயற்சி போல நல்ல விளைவுகளை அதிகரிக்கும். மேலும் பல கோணங்களிலும் சிந்தித்து, தன் திறமையையும் உழைப்பையும் சேர்த்து முயற்சி செய்பவன் அடையும் நன்மைகள் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தவன் முயற்சியைப் போல பலமடங்கு அதிகரிக்கும். ஆரம்பத்தில் வழியே இல்லை என்று தோன்றியது போய் புதிய பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாய்ப்பாக அமையும்.
எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள். முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள். புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள். சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.
தங்கமான சங்கங்கள்
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்
காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
அனுமதி கேட்க்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
"கன்னத்தில் கொசுக்கடி"
இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
புலிக்கு பின்னாடி போன
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..
இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]
கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்
இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்
காதலியே
வீசிப்பழக்கப்பட்ட என் விழிகளுக்கு
கண்ணீரை வரவழைக்க
பழக்கி விட்டவள் நீ !
மொழிகளை மட்டுமே
பேசிப்பழக்கப்பட்ட என் நாவுக்கு
மௌனத்தை பேச -
சொல்லிக்கொடுத்தவள் நீ !
இன்னலை மட்டுமே
தாங்கக்கூடிய என் இதயத்திற்கு
இமயத்தை தாங்க -
சொல்லிக்கொடுத்தவள் நீ !
பேச்சை மட்டும் நிறுத்தியுள்ள நீ
என் மூச்சையும் நிறுத்திவிடு
கொள்ளையிட்டே பழக்கப்பட்ட நீ
கொள்ளியிடவும் பழகிக்கொள் !
என் பாசம் புரியாதவர்களுக்கு
இந்த உயிர் மறையும்
போது... புரியும் அந்த பிரியம்,
என் மௌனம் அறியாதவர்களுக்கு
மௌனத்தின் வலிமை நான்
கண் மூடும் போது தெரியும்,
என் கண்களின் மொழி தெரியும்
நான் கண்ணுக்கு தெரியாத போது
உன் வாழ்வின் அர்த்தம் புரியும்
நான் உன்னை விட்டு பிரியும் போது ...
இன்னும் 10 ஆண்டுகளுக்கு மோடி அரசியல்தான்
சமீபத்தில் நடந்த தேர்தல்களில், சட்டசபை இடைத்தேர்தல்களை தவிர, மற்ற எந்தத் தேர்தலிலும், தற்போது பதிவான அளவுக்கு, கூடுதலாக ஓட்டுப் பதிவு நடக்கவில்லை. அதற்கான காரணம் குறித்து, தமிழக அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான, வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது:
40 தொகுதிகள்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று
நடந்த தேர்தலில், கிட்டத்தட்ட, 12 சதவீத ஓட்டுகள், கூடுதலாக பதிவாகி உள்ளன.
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் போதெல்லாம், ஏதோ ஒரு மாற்றத்தை
ஏற்படுத்த வேண்டும் என்ற மனநிலையில், மக்கள் உள்ளனர் என்பதை அறிந்து
கொள்ளலாம். கடந்த, 10 ஆண்டு கால, காங்., ஆட்சியின், கொள்கை முடிவுகள்
உட்பட, அந்த அரசின் பல நடவடிக்கைகளால், மக்கள் பல விதமான சிரமத்தை
அனுபவித்தனர். அதனால், ஆட்சி மாற்றம் தேவை என, நினைத்த மக்கள்,
தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமைந்த கூட்டணிக்கு அதிக வரவேற்பு
அளித்தனர். அதற்கேற்ப, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியும்,
தமிழகத்துக்கு வந்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்தது, அந்த அணிக்கு மேலும்
வலுசேர்த்தது. அதன் தாக்கமே ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க காரணம்.
இதன்மூலம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மோடிக்கு ஆதரவாக, திரண்டு வந்து
ஓட்டளித்திருக்கலாம் என, நம்பலாம். அதேநேரத்தில், மோடிக்கு ஆதரவாக,
குறிப்பிட்ட சதவீத மக்கள் திரண்டு வந்து
ஓட்டளித்ததைப் போல, அவருக்கு எதிராகவும், குறிப்பிட்ட அளவினர்
திரண்டிருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது. குறிப்பாக, மோடி
ஆட்சிக்கு வந்தால், தங்களுக்கு பின்னடைவு ஏற்படும் என, கருதும்
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித்களும் இந்த முறை
ஒருமுகப்படுத்தப்பட்டு, ஓட்டளித்திருக்கின்றனர் என, சொல்லலாம்.
ஆதரவும் எதிர்ப்பும்:
சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., முந்தைய
தேர்தல்களை விட, 10 சதவீத ஓட்டுகளை, கூடுதலாகப் பெற்று வெற்றி அடைந்தது.
அதேநேரத்தில், தோல்வியடைந்த காங்கிரசும், கூடுதலாக, 5 சதவீத ஓட்டுகளைப்
பெற்றது. இதிலிருந்தே, ஆதரவு அதிகரித்துள்ளதைப் போல, எதிர்ப்பும்
அதிகரித்துள்ளதை அறியலாம். அதுபோன்ற நிலைமைதான், தற்போது தமிழகத்திலும்
ஏற்பட்டுள்ளது. மோடிக்கு எதிரான நிலையை, கடைசி நேரத்தில், தி.மு.க.,
எடுத்ததால், அவருக்கு எதிரான ஓட்டுகள் அனைத்தையும், அந்த கூட்டணி அறுவடை
செய்திருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி அறுவடை செய்திருந்தால், இந்தத்
தேர்தலில், தி.மு.க., கூட்டணி அதிக இடங்களைப் பிடித்தாலும்,
ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படிப்பட்ட ஒரு நிலை உருவானால்,
தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக, பா.ஜ., கூட்டணி அதிக இடங்களைப் பிடிக்கலாம்.
மேலும், தமிழகத்தில், இந்த தேர்தலில், பலமுனைப் போட்டி நிலவியதால்,
அனைத்து வேட்பாளர்களும், மக்களை பெரிய அளவில் திரட்டி வந்து ஓட்டளிக்க
செய்துள்ளனர். இதுவும், ஓட்டு சதவீதம் அதிகரிக்க முக்கியமான காரணம்.
தமிழகம் முழுவதும் குடி தண்ணீர் பிரச்னை, மின் வெட்டு, பல்வேறு கட்டண
உயர்வு என, அன்றாடம் மக்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அந்த
எதிர்ப்பு, தேர்தல் நேரங்களில் மட்டுமே, வேகமாக வெளிப்படும். அந்த
எதிர்ப்பும், ஓட்டு சதவீதம் அதிகரிக்க மற்றொரு காரணம்.
இந்து ஆதரவு நிலைப்பாடு:
இப்படி எந்த காரணத்தை கவனித்தாலும், அதனால், பெரிதும் பாதிக்கப்படுவது, அ.தி.மு.க.,வே. குறிப்பாக, இந்து ஆதரவு நிலைப்பாட்டில்,
பா.ஜ., கூட்டணி பெறும் ஓட்டுகளில், பெரும் பகுதியை இதுவரை, அ.தி.மு.க.,
தரப்பு, பெற்று வந்தது. அதை அறிந்து தான், முதல்வர் ஜெயலலிதா,
அ.தி.மு.க.,வுக்கு போடும் ஓட்டு பா.ஜ.,வுக்கு போடும் ஓட்டு என்ற, ஒரு
நிலையை ஏற்படுத்தி வைத்திருந்தார். இதை அறிந்த, பா.ஜ., தரப்பு, ஜெயலலிதாவை
கடுமையாக விமர்சித்ததோடு, மோடி மூலமாகவும் விமர்சித்ததால், அதற்கு எதிராக
ஜெயலலிதா கொதித்தெழுந்து மோடியை விமர்சித்ததும், பா.ஜ.,வுக்கு சாதகமாக
அமைந்து விட்டது.
பா.ஜ., கூட்டணி வெற்றி வாகை:
இப்போது
பதிவாகி இருக்கும், ஓட்டுப்பதிவின் அடிப்படையில் பார்த்தால், கோவை, ஈரோடு,
திருப்பூர், பொள்ளாச்சி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி,
ராமநாதபுரம், தென்சென்னை, ஆரணி, தர்மபுரி, விழுப்புரம், சேலம் என, 14
தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி வெற்றி வாகை சூட வாய்ப்பிருக்கிறது.
மொத்தத்தில், இந்த தேர்தல் முடிவுகள் மூலம், தமிழகத்தில் கருணாநிதி,
ஜெயலலிதாவுக்கு அடுத்த சக்தியாக, விஜயகாந்த் உருவாகி விடுவார் என,
தெரிகிறது. டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது உட்பட, பல தவறுகளை சமீப
நாட்களில், விஜயகாந்த் செய்திருந்தாலும், பா.ஜ., கூட்டணியில் சரியான
நேரத்தில் இணைந்ததன் மூலம், அந்த தவறை அவர் சரி செய்துவிட்டார். இனி, 10
ஆண்டுகளுக்கு, தமிழகத்தில், மோடி ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற, இரண்டு
நிலைப்பாட்டில் தான், அரசியல் செல்லும். இவ்வாறு, அவர் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)