வீசிப்பழக்கப்பட்ட என் விழிகளுக்கு
கண்ணீரை வரவழைக்க
பழக்கி விட்டவள் நீ !
மொழிகளை மட்டுமே
பேசிப்பழக்கப்பட்ட என் நாவுக்கு
மௌனத்தை பேச -
சொல்லிக்கொடுத்தவள் நீ !
இன்னலை மட்டுமே
தாங்கக்கூடிய என் இதயத்திற்கு
இமயத்தை தாங்க -
சொல்லிக்கொடுத்தவள் நீ !
பேச்சை மட்டும் நிறுத்தியுள்ள நீ
என் மூச்சையும் நிறுத்திவிடு
கொள்ளையிட்டே பழக்கப்பட்ட நீ
கொள்ளியிடவும் பழகிக்கொள் !
என் பாசம் புரியாதவர்களுக்கு
இந்த உயிர் மறையும்
போது... புரியும் அந்த பிரியம்,
என் மௌனம் அறியாதவர்களுக்கு
மௌனத்தின் வலிமை நான்
கண் மூடும் போது தெரியும்,
என் கண்களின் மொழி தெரியும்
நான் கண்ணுக்கு தெரியாத போது
உன் வாழ்வின் அர்த்தம் புரியும்
நான் உன்னை விட்டு பிரியும் போது ...
No comments:
Post a Comment