Thursday, 10 July 2014

ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரர் திருக்கோயில்.திமிரி


விஜயநகரப் பேரரசின் வரலாற்றில் திம்மிரெட்டி பொம்மிரெட்டி வேலூர் கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு குருநில மன்னர்களாக நிர்வாகித்த காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் வழித்தோன்றலான சதாசிவராய மன்னர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லை (திமிரி) பகுதியில் பல நற்காரியங்கள் புரிந்தார்.






ஒரு சமயம் தொற்றுநோய் விஷகிருமிகளால் மக்கள் நோய்களுக்கு ஆளாகி அவதியுற்றனர். இரக்க குணமும் இறைபற்றும் மிக்க சதாசிவராயர் இதனைகண்டு வேதனையுற்றார். உடனடியாக தமது அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்தார். பின்னர் தமது ராஜவைத்தியரான ராச பண்டித சிரோன்மணி மந்திரவைத்திய கேசரி என்று புகழப்பட்ட கன்னிகா பரமேஸ்வரர் அந்தனரிடம் மக்கள் நோய்களை தீர்க்கும் உபாயத்தை விவாதித்தார்.

மன்னரின் அன்பான ஆணைப்படி அந்த ராஜவைத்தியர் தன்வந்ரி முறையில் சந்திரபாஷானம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்ளிட்ட ஐந்து பாஷாணங்களை கட்டென ஆக்கி தெயவாம்சமும் மருத்துவ குணமும் இரண்டறக் கலந்த சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்துத் தந்தருளினார்.

ஆற்காட்டியிலிருந்து தெற்கே 8 k.m

ஆரணியிளிருந்து வடக்கே 18. k.m

பேருந்து நிறுத்தம் : திமிரி

( திமிரி மார்கெட் வழியாக திமிரி கோட்டையிலுள்ள இவ்வாலயத்தை அடையலாம் )



இதன் உயரம் ஆறு அங்குலம் மட்டுமே என்பது குறிப்பிடதகத்து.

கி பி 1379 ஆம் ஆண்டு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திமிரி நகரின் கோட்டையில் அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12வது சங்கராச்சாரியார் ஸ்ரீ வித்யாரன்ய சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆகம முறைப்படியும் சித்த மருத்துவ முறைப்படியும் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம் பக்தர்களுக்கு அருள்விருந்தை வழங்கியது! அதன் மருத்துவ குணங்கள் மிகுந்த அபிஷேக தீர்த்தம் அருமருந்தாய் விளங்கியது!!.

அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைகப்பட்ட அப்பகுதி திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் திமிரி நகரம் என்று பெயர் மாற்றம் கொண்டது!.

மக்கள் பிணிதீர்த்து மகிழ்வதைக் கண்ட சதாசிவராயர் பெருமகிழ்ச்சியடைந்தார். பக்திப் பரவசத்தில் நெகிழ்ந்தார்.

சோதனைகள் மானுடர்களுக்கு மட்டுமல்ல கடவுள்களுக்கும் சிலசமயம் ஏற்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக மக்கள் குறைபோக்கி தர்மத்தை நிலைநாட்ட மண்ணில் அவதாரமெடுக்கும் எல்லா தெய்வங்களுக்கும் இடர்பாடு வந்ததாய் புராணங்கள் கூறுகின்றன.

ஆற்காடு நவாப் படையெடுப்பின் போது வேலூர் கோட்டையும் திமிரி கோட்டையும் பிடிபட்டது - இடிபட்டது !.

இந்தியாவின் புராதன சின்னங்களையும் விலைமதிப்பில்லா பொருட்களையும் கொள்ளையடிக்க வேண்டும் என்பது முகலாயப் படையினரின் இரண்டாவது குறிக்கோள். அந்த கொள்ளையரிடமிருந்து திமிரி பாஷாண லிங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு வேதியல் கலவையிலான கூர்ம வடிவ கூட்டுக்குள் மறைத்து திமிரி சோமநாத ஈஸ்வரர் கோவிலின் நீர்நிரம்பிய குளத்தில் புதைத்துவைதனர் .

1985 ஆம் ஆண்டில் திமிரி நகரில் ஐயப்பன் கோவில் நிர்மானபணி நடந்தது. இப்பணி ஒரு காலகட்டத்தில் தடைபட்டு நின்றது. இந்தப்பணியில் ஏதேனும் தெய்வகுற்றம் நிகழந்துவிட்டதோ என ஐயமுற்ற திமிரி ஐயப்பன் நற்பணி மன்ற நிர்வாகி திரு A.S.இராதாகிருஷ்ணன் அவர்கள் அகத்தியர் நாடிசோதிடரை நாடினார்.


நாடிசோதிடர் (ஜே.ஹரி) திருA.S.இராதாகிருஷ்ணன்(முற்பிறவி கன்னிகாபரமேஸ்வரர்) அவர்களின் லட்சியப்பாதையை தெளிவாகக் காட்டினார் - ஆன்மிக வாழ்க்கையை விரிவாகக் கூறினார். அகத்தியர் நாடியில் திமிரி சோமநாத ஈஸ்வரர் ஆலய குளத்தில் புதையுண்ட “பாஷாண லிங்கம்” பற்றி செய்தி வந்தது!.

அந்த பாஷாண லிங்கம் தனது முயற்சியால் அகழ்ந்தெடுக்கப்பட்டு தன்னுடைய கரங்களால் மீண்டும் பிரதிஷ்டை செயப்படும் என்ற குறிப்பைக் கேட்ட திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் (முற்பிறவி கன்னிகாபரமேஸ்வரர்) சிவனின்பால் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி மெய்சிலிர்ந்து அகமகிழ்ந்தார்.

பெருமுயற்சிகொண்டு குளத்தில் புதையுண்ட அந்த அபூர்வ லிங்கத்தைத் தேடினார். ஊரே திரண்டு வந்து வேடிக்கைபார்த்தது - பலவிதமாய் விமர்சனம் செய்தது. 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அந்த அதிசயம் நிகழ்ந்தது!. நம்பிக்கையுடன் தேடிய திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் அவர்களுக்கு குளத்தில் சுமார் 600 ஆண்டுகளாக புதையுண்டுகிடந்த திமிரி பாஷாண லிங்கம் கிடைத்தது!.

திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் அவர்களுக்கு தனது தர்மகர்மா யோகத்தால் பூர்வ ஜென்ம பலனாக தன்னிடம் கிடைத்த அந்த அபூர்வ திமிரி பாஷாண லிங்கத்தை இதுநாள்வரை தன் கண்ணின் மணிபோல் காத்துவருகிறார். இந்த லிங்கத்திற்கு ஓலைச்சுவடிகளில் கூறிய முறைப்படி இன்று வரை அவராகவே அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறார்.

இந்த லிங்கம் தற்போது நன்னீர் நிரப்பப்பட்ட கண்ணாடி லிங்க வடிவிலான குடுவையில் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

அதிசயம்மிக்க இந்த திமிரி பாஷாண லிங்கத்தின் பேரருள் உலகமெங்கும் உள்ள பக்தர்களை சென்று சேரும் வகையில் திமிரி நகரின் கோட்டையில் தற்போது ஆகமவிதிப்படி அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் திருகோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் திமிரி பாஷாண லிங்க திருகோயில் இந்தியாவில் உள்ள சைவத் திருத்தலங்களில் சிறந்து விளங்கபோவது திண்ணம்!.



நவபாஷாணம் பற்றி பல வித கருத்து நிலவுகின்றது .., பல இடங்களில் நவபாஷாணம் சிலையை போகர் செய்து மறைத்து வைதிருக்கிறார் . தக்க காலத்தில் வெளிவரும் என்றெல்லாம் பலர் கூறுகின்றனர் .., பூம்பாறை கோயிலில் இருப்பது நவபாஷாணம் என்றும் ..., புதுக்கோட்டையில் ஒரு பைரவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது ஆனால் மச்சம் குறைவு அதனால் விஷயமாகி விட்டது என்றும் கூறுகின்றனர் .. இதுக்கும் மேல் சில வைத்தியர்கள் மற்றும் சித்தர்கள் அருள் பெற்றவர்கள் என்று கூறிக்கொள்வோர் தங்களிடம் நவபாஷாணம் சிலை உள்ளது .., தாங்களால் நவபாஷாண சிலை செய்யமுடியும் என்று கூறுகின்ற கூத்துக்கு அளவே இல்லை ...




அப்படி அவை எல்லாம் நவபாஷாணமானாக இருந்திருந்தால் அவற்றின் நிலையே வேறு அனைத்தும் ஆய்வு கூடத்தில் தான் இருந்திருக்கும் அல்லது முழுக்க முழுக்க அரசாங்க கட்டுபாட்டில் வந்திருக்கும்


"உண்மையில் பழனியம்பதியில் இருப்பது மட்டும் தான் நவபாஷாணம் . மற்றவை எதுவும் நவபாஷாணம் அல்ல அல்ல அல்லவே அல்ல !!.அதே போல் போகர் இன்னொன்றை ஆங்காங்கே மறைத்து வைத்திருக்கிறார் என்பதும் உண்மையல்ல ... போகர் பெருமான் தமக்கு உதவியாக இருந்த புலிப்பாணிக்காக ஆள் காட்டி விரல் அளவு ஒரு நவபாஷாண முருகன் சிலையை தந்திருக்கிறார் அது மட்டும் தற்போது பழனியம்பதியில் மறைந்து இருக்கிறது . அதுவும் தற்போதைய கால கட்ட சுழலில் வெளி வருவதற்கு வாய்ப்பே இல்லை .,திமிரியில் இருப்பதும் பஞ்சபாஷாணமே . ". இது அகத்தியர் ஜீவ நாடியில் கூறிய வாக்கு ... இந்த பேருண்மையை எடுத்துக் கொள்வது அவரவர் விருப்பம் அஃதே .



ஆனால் "திமிரியில் இருப்பதும் பஞ்சபாஷாணமே" என்று அகத்தியம் பெருமான் கூறினார் அல்லவா! அது பற்றி பார்ப்போம் தற்போது வேலூரில் திமிரி எனுமிடத்தில் பஞ்ச பாஷாண சோமநாத லிங்கம் . இதன் தீர்த்தம் , தேனை கடந்த 1 வருட காலம் உபயோகப் படுத்தியுள்ளேன் . பல நண்பர்களுக்கும் கொடுத்துளேன் நல்ல முனேற்றம் பலருக்கு ஏற்பட்டுள்ளது ... 


ஆற்காட்டியிலிருந்து தெற்கே 8 k.m

ஆரணியிளிருந்து வடக்கே 18. k.m

பேருந்து நிறுத்தம் : திமிரி
( திமிரி மார்கெட் வழியாக திமிரி கோட்டையிலுள்ள இவ்வாலயத்தை அடையலாம் )











தொடர்புக்கு :
திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள்,
ஸ்ரீ சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் திருக்கோயில்,
திமிரி - 632512.
ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம்.
அலைபேசி எண் : 93447 30899.