Monday, 14 April 2014

தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள்: மோடி விளாசல்

தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள்: மோடி விளாசல்


 
''தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் நடுவில் தமிழக மக்கள் சிக்கி தவிக்கின்றனர். மக்களைப் பற்றி சிந்திக்கவும், அவர்கள் மீது அக்கறை செலுத்தவும், இந்த இரு
கட்சிகளும் நினைப்பது இல்லை. ''அவர்கள் தீய விளையாட்டுக்களை விட்டாக வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழகத்தில் புதிதாக உருவாகி உள்ள, மூன்றாவது சக்தி தமிழக மக்களின் விருப்பங்களையும் எண்ணங்களையும் நிறைவேற்றும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லுாரி மைதானத்தில், தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.

லட்சுமியிடம் வேண்டுகோள்:
கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது:மகாவீரர் தினமான இன்று ஒரு சிறந்த நாள். நாளை, அம்பேத்கர் பிறந்த தினம். மேலும், முக்கியமாக தமிழ் புத்தாண்டு தினம். இந்த நாளில் லட்சுமி தேவி, சரஸ்வதி தேவியை மன்றாடி வேண்டிக் கொள்கிறேன். 'தமிழக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் வரங்களை அள்ளித்தர வேண்டும்' என, வேண்டிக் கொள்கிறேன்.இந்த லோக்சபா தேர்தல் தனித்தன்மை வாய்ந்தது. என் வாழ்க்கையில் எத்தனையோ தேர்தலை சந்தித்திருக்கிறேன். ஆனால், இந்த தேர்தலை, மக்கள் ஆவேசமாக பார்ப்பதை, முதன் முதலாக பார்க்கிறேன். இந்த தேர்தலில் தான் ஒரு அதிசயம் நடந்துள்ளது. அதாவது, தேர்தல் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'மத்திய அரசை வீழ்த்த வேண்டும்; புதிய அரசை பொறுப்பேற்க வைக்க வேண்டும்' என்ற ஒரு விஷயத்தை, மக்கள் அனைவரும் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்; இதில் எந்த சந்தேகமும் கிடையாது.நாட்டு மக்கள் கடந்த, 10 ஆண்டுகளாக துன்புற்றுக் கொண்டிருக்கின்றனர். எனவே, ஒரு மாற்றம் தேவை என்பதால், மத்திய அரசை துாக்கி எறிய வேண்டும் என, மக்கள் சபதம் எடுத்துள்ளனர். உலக அரங்கில், இந்தியா எப்படி தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என நிர்ணயிக்கும் தேர்தல் இது.கூட்டாட்சியின் தத்துவத்தை மத்திய அரசு மதிக்கவில்லை. பிராந்திய அரசுகளின் எண்ணங்களையும் ஆசைகளையும் தேவைகளையும் துளி கூட, மத்திய அரசு மதிப்பு கொடுப்பதில்லை. மாநில மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்கும் அரசு வந்தே தீரும்.மத்திய அரசு, தற்போது மாநில மக்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை. மாநில அரசுகளை அடிமைகளாக கருதுகிறது. மாநில மக்களின் உரிமைக்காகவும், அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் எங்கள் அரசு அமைக்கப்படும். 'மாநில அரசுகளுடன் தோளோடு தோளாக இருந்து, இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்வோம்' என, தமிழக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் உறுதியளிக்கிறேன்.தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளன. பிரதமரும், மாநில முதல்வர்களும் ஒரே அணியாக இருந்து, நாட்டின் பிரச்னைகளை தீர்ப்போம் என, உறுதியளிக்கிறேன்.

புதிய வரலாறு
பா.ஜ., அணியில், 25 கட்சிகள் இணைந்து, புதிய வரலாறு படைத்துள்ளன. நமது கூட்டணி, இந்தியா மட்டுமல்ல, தமிழகத்திலும் புதிய வரலாறை ஏற்படுத்த போகிறது.தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளின் நடுவில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். தி.மு.க., ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தால், அ.தி.மு.க.,வை ஒழிக்கவும், அ.தி.மு.க., ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தால், தி.மு.க.,வை ஒழிக்கவும் நினைக்கின்றன.மக்களை பற்றி சிந்திக்கவும், அவர்கள் மீது அக்கறை செலுத்தவும் இரு கட்சிகளும் நினைப்பது இல்லை. இதைதான், தமிழகத்தில் பல ஆண்டுகளாக பார்க்கிறோம். தமிழகத்தில், மூன்றாவதாக ஒரு சக்தி உருவாகியுள்ளது. தமிழகத்தில், ஆற்றல் மிக்க இந்த மூன்றாவது சக்தி, மற்ற கட்சிகளை நடுங்க வைத்துள்ளது.எனவே, அவர்கள் தங்கள் தீய விளையாட்டுக்களை விட்டாக வேண்டும்; வேறு வழியில்லை. இந்த ஆற்றல்மிக்க, மூன்றாவது அணி, தமிழக மக்களின் விருப்பங்களையும் எண்ணங்களையும் நிறைவேற்றும்.

மீனவர் பிரச்னை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்பப்படுகின்றனர். குஜராத், ராஜஸ்தான் மாநில மீனவர்கள், பாகிஸ்தான் படையினரால் பாதிக்கப்படுகின்றனர். கேரள மீனவர்களை, இத்தாலிய படையினர் வந்து சுட்டுக் கொல்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம், மத்தியில் எங்கள் தலைமையில் அமைய உள்ள புதிய அரசு, உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும்.கிழக்கு மாநிலங்களில் தனிப்பட்ட பிரச்னைகள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் சில பிரச்னைகள் உள்ளன. எல்லாரையும் அரவணைத்து, அனைத்து மக்களின் எண்ணங்களும் ஈடேறும் வகையில் நாங்கள் அனைவரும் கைகோர்த்து, ஒரே அணியாக செயல்படுவோம்.
ஐ.மு., கூட்டணி நிலைமை பரிதாபமாக உள்ளது. 'மறு எண்ணிக்கை அமைச்சர்' (சிதம்பரம்) தேர்தலில் போட்டியிட பயந்து ஓடி விட்டார். அந்த அணி தோல்வி பயத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.ஏழைகளின் பெயரை சொல்லி ஏமாற்றி வருகிறது. தேர்தல் வந்தால் தான் ஏழைகளை பற்றிய எண்ணம் வருகிறது. ஏழை குடிசைக்குள் சென்று புகைப்படம் பிடித்து, ஏழ்மையை சுற்றுலா பொருளாக பார்க்கின்றனர்.

காங்கிஸ் கட்சியின் இளைய தலைவருக்கு ஏழ்மையை பற்றி தெரியாது. ஏழைகள் வீட்டில் அடுப்பு எரியவில்லை என்றால், அவர்கள் படும் துயரம் எனக்கு தெரியும். நான் ஏழ்மையில் பிறந்தேன்; ஏழ்மையில் வளர்ந்தேன். டீ விற்று முன்னேறினேன். ஏழைகளின் வாழ்க்கையில் ஒளி விளக்கு ஏற்றி வைப்பேன்.இவ்வாறு, மோடி பேசினார்.

'அனைவருக்கும் குடியிருக்க வீடு; தடையின்றி மின்சாரம்' : ''இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும், 2022ல், தனி வீடு, தடையின்றி குடிநீர், மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சென்னையில், பிரசார கூட்டத்தில் பேசிய, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி மக்களுக்கு உறுதி அளித்தார்.

அவர் பேசியதாவது:காங்கிரசின், 2009 லோக்சபா தேர்தல் அறிக்கையில், 'ஐந்து ஆண்டுகளில், 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம்' என, உறுதிமொழி அளித்து இருந்தது. ஐந்து ஆண்டு ஆட்சியில், வேலைவாய்ப்பை உருவாக்காமல், 'இன்னாருக்கு வாய்ப்பு தாருங்கள்' என, காங்கிரஸ் கட்சி கேட்கிறது.ஏற்கனவே, காங்கிரஸ் அளித்த உறுதிமொழி என்னாயிற்று? மீனவர்களின் நலன் மீது மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், மீனவர்கள் முன்னேற்றம் அடைய முடியும். மீனவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவேன். டில்லியில், பலவீனமான அரசு இருந்தால், எந்த பலனும் கிடையாது. பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் முழு ஒத்துழைப்புடன் ஆற்றல் மிக்க அரசு அமைக்கப்படும்.

பெரிய நாடான இந்தியாவை, சின்ன நாடுகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றன; இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உலகில் பல நாடுகளில் நம் வம்சாவளிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரே தாய், நம் பாரதம் தான். அவர்களின் பாஸ்போர்ட் பல நிறங்களில் இருக்கலாம்; ஆனால், அவர்களின் உடலில் ஓடும் ரத்தம் சிவப்பு நிறம் என்பதை மறந்து விடக் கூடாது.மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் நலன் மீது மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும்;புதிய அரசு இனிமேல் கவனம் செலுத்தும். மலேசியா, சிங்கப்பூர், இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக போராட வேண்டும். வரும், 2022ல், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் போது, இந்தியாவில் உள்ள அனைவருக்கும், குடிநீர், மின்சார வசதியுடன் கூடிய வீடுகள் கிடைக்கும். நோயாளிகளுக்கும், உடனடியாக நிவாரணம் கிடைக்கும் என, சபதம் ஏற்கிறேன்; இதற்கு உங்கள் ஆதரவை கேட்கிறேன். ராமதாஸ், விஜயகாந்த், வைகோ போன்றவர்களால் தன்னலமற்ற கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியால், தமிழகத்தில் புதிய வரலாறு ஏற்படும். அதற்கு எல்லாரும் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு மோடி பேசினார்.மோடியின் பேச்சை, 'துார்தர்ஷன்' முன்னாள் இயக்குனரும், பத்திரிகையாளருமான ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தார்.தமிழகத்தின் முன்னாள், டி.ஜி.பி., பாலசந்திரன், நேற்று, தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார்.

மோடி பொதுக்கூட்டம் அதிகாரிகள் கண்காணிப்பு
*கூட்ட மேடை, காவி நிறத்தில் அமைக்கப்பட்டு இருந்தது.
*மேடையில் இருந்த பேனரில், மோடி, வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத் சிங் படங்கள் இடம் பெற்றிருந்தன. பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஐ.ஜே.கே., தலைவர் பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள் படங்களும் இருந்தன.
*அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள, பறக்கும் படை அதிகாரிகள், மோடி கூட்டத்தை கண்காணித்து, வீடியோவில் பதிவு செய்தனர்.
*மாலை, 6:40 மணிக்கு வந்தே மாதரம் பாடலுடன் பொது கூட்டம் துவங்கியது.
*திருவள்ளூர், வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர்கள் வந்திருந்தனர்.

எந்தெந்த கனவுக்கு என்ன பலன்? கனவுகளின் முழு பலன்கள்!



இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும். நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.
சுப சொப்பனங்கள் பசு, எருது, யானை தேவாலயங்கள, அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல்? ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும்.வெண்ணிறப் பாம்பு கடித்தல் தேள் கடித்தல் சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், கட்டுப்படல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு
பகலில் காணும் கனவுக்கு பலனில்லை
இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.
ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை தூக்கம் எதற்காக?
தூங்குகின்ற போதுதான் நமது உடல் உறுப்புக்கள் எல்லாம் ஓய்வெடுத்துக் கொள்கின்றன. தூக்கம்தான் உயிரினங்களுக்கு உண்மையான ஓய்வு.
தூங்கும்போது இதயத்துடிப்பு குறைவாகவும் இரத்தம் சீராக செயல்படுகின்றதென்றும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிலர் சொல்வார்கள் ஒரு கோழித் தூக்கமாவது தூங்கவேண்டுமென்று. கோழி நின்றுகொண்டே தூங்குமென்பது எல்லோருக்கும் தெரியும்.
யுத்தகாலங்களில் போர் வீரர்கள் சிறிதுநேர ஓய்வு கிடைத்தாலும் நின்றபடியே தூங்குவார்களாம்! அதுதான் கோழித்தூக்கம்! ஆனால் எங்களில் சிலர் இரவில் கும்பகர்ணத் தூக்கம் தூங்கிவிட்டுக் காலை எட்டு அல்லது ஒன்பது மணிக்கு எழும்புவார்கள் பின்பு மத்தியான‌ம் சாப்பாட்டிற்குப் பின்னரும் பிற்பகிலில் ஒரு மணிநேரமாவது தூங்குவார்கள். அவர்களின் கணக்குப்படி அதை கோழித்தூக்கம் என்று கூறிக்கொள்வார்கள்.
மனிதன் ஒவ்வொரு இரவும் இறந்து மீண்டும் மறுநாள் பிறக்கின்றான்” என்று.
ஆனால் சிலர் இருக்கின்றார்கள் எவ்வளவுதான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் சின்னச் சத்தம் கேட்டாலும் விழித்துவிடுவார்கள்.
மிருகங்களில் நாய்களும் அப்படித்தான்! நாய் எப்பொழுதும் தூங்கும்போது காதுப்பகுதியை தரையில் வைத்தே படுத்துக்கொள்ளும். அதன் செவிப்புலன்கள் தூரத்தில் ஏற்படும் சிறு அதிர்வையும் உணர்த்தி விழிக்க வைக்கின்றது.
சிலருக்கு தூங்குவதற்கு அமைதியான சூழ்நிலை வேண்டும். வேறு சிலர் இருக்கின்றார்கள் எந்தமாதிரியான இடத்திலும் தூங்கிவிடுவார்கள். மண்டலேஸ்வரன் என்ற எனது நண்பர் ஒருவர் இசைக்குழு நடாத்தி வந்தவர்.
திருவிழாக்கள், கொண்டாட்டங்களுக்கு நிகழ்ச்சி நடாத்துவதற்கு செல்லும்போது அங்கு அப்பொழுது வேறு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தால் அந்த சிறு இடைவெளியில் அங்கு ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் லைற் என்ஜினுக்குப் பக்கத்திலேயே ஒரு துணியை விரித்து தூங்கிவிடுவாராம்!
இதுவே அவருக்கு பழக்கமாகி பின் நாட்களில் அப்படியான சத்தம் இல்லாவிட்டால் தனக்கு தூக்கம் வருவதில்லை என்று சொன்னார். இப்படி விசித்திரமான பழக்கங்களை உடையவர்களும் இருக்கின்றார்கள்
குழந்தைகள் தூங்கும் நேரத்தில்த்தான் வளர்ச்சியடைகின்றதாம்! ஆம் குழந்தைகளின் தொழிலே தூக்கம்தான்.
தூக்கத்தில் கனவுகள் வருவது வழமை. கனவு என்பது என்ன?
எங்களின் நினைவுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருவதாக உளவியல் ஆராட்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
இள வயதினர்க்கு காதல் கனவுகளே அதிகமாக வருமாம். சினிமா பார்த்துவிட்டு வந்து தூங்கினால் கனவில் அந்தப் படத்தின் கதாநாயகனோ, அல்லது கதாநாயகியோ கனவில் தோன்றுவார்களாம். அவரவர்களின் நினைவுகளே கனவுகள்.
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்தனது நறுக்குகள் ஒன்றில் சொல்லுகின்றார் ‘உன் கனவில் பாம்பு துரத்துகின்றது நீ ஓடுகின்றாய்! குறவன் கனவில் அவன் துரத்துகின்றான் பாம்பு ஓடுகின்றது” என்று
ஆம் கனவுகள் எல்லாம் அவரவர் நினைவுகளைப் பொறுத்ததே.
கனவுகளுக்கு பலன் சொல்பவர்களும் உண்டு.
கனவில் மலத்தைக் கண்டால் பணவரவாம்! மாங்கல்யத்தைக் கண்டால் துன்பம் சூழுமாம்!
இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். பல்லி விழுந்தாலும் பலன் சொல்வார்கள்! பல்லு விழுந்தாலும் பலன் சொல்வார்கள்
உடலின் மேல் பாம்பு ஊர்ந்து செல்வது நல்லது. சங்க காலத்தில் வாழ்ந்த வேடுவர்கள் இதனை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர்.
இன்றைக்கும் கோத்தகிரி, ஊட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் படுக இன மக்கள் பாம்பை உடலின் மீது ஊர்ந்து செல்ல வைத்து தோஷ சாந்தி செய்கின்றனர்.
எனவே, பாம்பு ஒருவர் மீது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால், அவருக்கு இருந்த கண்டம் அல்லது கெட்ட நேரம் விலகிச் சென்று விட்டதாகக் கருதலாம்
மனதின் வெளிப்பாடே கனவுகள். எந்த கனவுகளும் விருப்பத்திற்கு உட்பட்டு வருபவை அல்ல. அவை தன்னிச்சையாக நிகழும் மனதின் உள்ளுணர்வு வெளிப்பாடுகள். அவற்றுக்கும் பலன்கள் உண்டு. ஆனால் அவை யாராலும் அறியப்படாதவை.
நல்ல கனவுகளைக் கண்டால் என்றுமே உறக்கம் வராது. அதுபோல தீய கனவுகளைக் கண்டால் கடவுளை வணங்கிவிட்டு உறங்குவது நல்லது.
இதோ சில கனவுகளுக்கான பலன்கள்:
* குழந்தையைக் கனவில் காண்பது நல்லது. தொழில் விருத்தி ஏற்படும். பொருள் வரவு அதிகமாகும்.
* ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.
* சூரியனைக் கண்டால் வியாதிகள் நீங்கும். விரோதிகளை வெல்லும் ஆற்றல் கிட்டும்.
* கோயிலைக் கண்டால் நூதனமான தொழில் விருத்தியாகும். செல்வம் குவியப்போவதைக் குறிக்கும்.
* வெல்லத்தைச் சாப்பிடுவதாக கனவு கண்டால் வறுமை நீங்கும்.
* பலருடன் சேர்ந்து சாப்பிடுவதாக கனவு கண்டால் பொருள் லாபம் உண்டாகும்.
* பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ, உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாகும் குருவிகளைக் கனவில் காண்பது நன்மையானது. கஷ்டமான நிலை விலகும். வம்புவழக்கு இருப்பின் வெற்றி கிட்டும்; நோயுற்றிருப்பின் நோய் அகலும். குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும் திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும்.
குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு. ஆனால் குருவிக் கூட்டைத் தானே பிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம்.
குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும். குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே. ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.
குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன். பல தொல்லைகள் உண்டாகும். அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும்.
அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோ அதன் குட்டிகளோ இருப்பதாகக் காண நேரின் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்டமும் உண்டாகும்.
எரியும் அடுப்பு அணைத்து அதன் கரியையோ சாம்பலையோ காணநேரின் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு அதனால் துன்புறப் போவதை உணர்த்தும். அழுக்கு ஆடை அணிந்திருப்பதாகக் கண்டால் பலவித சங்கடங்கள் நேர இருக்கின்றன என அறியலாம்.
வெண்பட்டு ஆடை உடுத்தியிருப்பதாகக் காண நேரின் பெண்களின் சேர்க்கையும் அதனால், இலாபமும் நேரும் தன்னை யாரோ ஏமாற்றிவிட்டதாகக் கண்டால் வஞ்சகத்தால் தன்னிடமுள்ள பொருள் பறிபோகப் போகிறது என்பதை அறியலாம்.
* ஒரு நூதமான இயந்திரத்தைக் கண்டால், தான் மேற்கொள்ளப் போகும் செயலால் வெற்றியும் இலாபமும் ஏற்படும்.
* அந்த இயந்திரத்தைத் தானே இயக்குவதாய்க் காண நேரின், செய்யப்போகும் தொழிலில் நிச்சயம் அபிவிருத்தியும் இலாபமும் மிகும். அந்த இயந்திரம் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கண்டால் தான் நினைக்கும் காரியத்தைச் செய்வதால் நன்மை பெறலாம்.
* ஆனால இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்து நின்று போவதாகக் கண்டால், செய்யும் தொழில்கூட பாழ்படப் போகிறது என்பதை அறியலாம்.
* ஆண் பெண் கலந்த கூட்டத்தைக் கண்டால் செய்தொழிலில் விருத்தி உண்டாகும¢.
* நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீது வீண்பழி சுமத்துவர். எலுமிச்ச மரத்தைக் காண்பது நல்லது. அதில் பழங்கள் மிகுந்து தொங்குவதாகக் காணப்பட்டால் உடனடியாக எதிர்பாராத பணவரவு ஏற்படும்.
* அதுவே பழமாக இல்லாது காயாக இருப்பின் பண வரவு ஏற்படும். ஆனால் மிகவும் தாமதமாய்க் கிடைக்கக்கூடும்.
* எலுமிச்ச மரம் உலர்ந்து போய் விட்டதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். தெளிந்த நீரைக்காணின் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கப் போவதையும், நல்ல காலம் தொடங்குகிறது என்பதையும் அறியலாம் பேனா அல்லது எழுதுகோல் எதையேனும் கண்டால் கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.
* அரண்மனையைக் கண்டால் பொருள் விருத்தியாகும்.
* அரண்மனைக்குள் தாமே செவதாய்க் கான நேரின், உற்றார் உறவினர்களால் சந்தோஷம் மிகுதியாகும். செல்வ நிலையும் உயரும்.
* வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.
* எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.
*அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப் போவதைக் குறிக்கும். காய்ச்சல், நோய் ஏற்படும்.
* காதுகளைக் கண்டால் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம் நேரும்.
* தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக் கண்டால் கூட குடும்பத்தில் ஏற்படப் போகும் கலகத்தின் அறிகுறியே ஆகும்.
* சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக் கண்டால் குடும்பத்தில் பற்று அதிகமாகும். தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கை மிகும்.
* சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நம்பிக்கை மோசம் போவார்.
* ஒரு கதவையோ பூட்டையோ திறப்பதாகக் கண்டால் பிறருக்கு உதவுவதன் மூலமாகப் புகழ் பெறுவர் உண்மை: நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், முளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன. இதற்கு பலன்களாக நாம் எடுத்துக்கொள்பவை, நம்மால் ஏற்படுத்தபட்டவைதான்.
அவற்றில் உண்மை கிடையாது. `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதுபோலத்தான், கனவுகள் தொடர்பான பலன்களும்! நல்ல பலன் ஏற்படும் என்று நம்பினால் நல்ல பலனை அடையலாம் அல்லது அதை நெருங்கலாம். அதேபோன்றுதான் தீயபலனுக்கும்!
பாம்பு கனவில் வந்தாலும் பயப்பட வேண்டாம். பாலூட்டி இன மிருகமே இன்றைய மனித இனத்தின் முந்தைய நிலை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் பாலூட்டிகளுக்கும், பாம்பு போன்ற ஊர்வனவற்றிற்கும் பயங்கரமான சண்டைகள் நடந்தன. அந்த பழைய பகை உணர்வுகளின் நினைவுகள் மனித இனத்தின் மரபணுக்களில் அழுத்தமாக பதிந்து போனதுதான் மேற்படி கனவுக்கு காரணம்.கனவு பற்றிய மேலும் சில உண்மைத் தகவல்கள்: பார்வை இல்லாதவர்களுக்கு வரும் கனவுகளில் உருவங்கள் இடம்பெறுவதில்லை. சத்தம் மட்டுமே வரும். வளர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமின்றி கைக் குழந்தைகளும் கனவு காண்கின்றன. ஏன்… தாயில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூட கனவு வருகிறது. மனிதர்களை போன்று மிருகங்களும் கனவு காண்கின்றன அடைய நினைக்கும் உயர்நிலையை நம் எண்ணங்களை வாக்கியங்களாய் அமைத்து நம் பார்வையில் படும்படி வைப்பது நல்ல பலனைத் தரும். ஏனெனில் எது கண்களில் படுகின்றதோ அது மனதில் ஆழமாகப் பதிகின்றது.
மனம், தொடர்ந்து எதை நினைக்கின்றதோ அதுவாகவே நாம் ஆகிறோம். வெற்றியின் முதல் கட்டம் நம்மை நாமே வெற்றியாளராக பார்ப்பதுதான். இதுமட்டும் வெற்றிக்கான காரணி ஆகிவிடாது. கனவில் கண்டு மகிழ்ந்த காட்சியும் கண்முன்னே தெரியும் வாசகங்களும் நிஜம் பெற சரியான திட்டம் தேவை.