3700 கி.மீ. தொங்கியபடி விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம் செய்த சிறுவன்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் விமான சக்கர பகுதியில் ஒளிந்து கொண்டு 3700 கிமீ தூரம்
பயணம் செய்த சிறுவன் தரையிறங்கும் போது கீழே குதித்து உயிர் தப்பினான்.
இந்த அதிசய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹவாய் தீவில் உள்ள மவு
என்ற இடத்தில் காகுலை விமான நிலைய ஓடு பாதையில் சுற்றி திரிந்த 16 வயது
சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் விமான
சக்கரத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்து வந்ததாக தெரிவித்துள்ளான்.
இதுகுறித்து போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது: அமெரிக்காவில் உள்ள சான்டா கிளாரா என்ற பகுதியை சேர்ந்த சிறுவன், வீட்டில் பெற்றோருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக வீட்டை விட்டு வெளியேறினான். அங்கிருந்து எங்கே போவது என்று தெரியாமல் சான்சோஸ் விமான நிலையத்துக்கு சென்றுள்ளான். அங்கு ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கர பகுதியில் எப்படியோ சென்று ஒளிந்து கொண்டான். அந்த விமானம் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து சென்று 3700 கிமீ தாண்டி ஹவாய் சென்றது.
சுமார் ஐந்தரை மணி நேரம் விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம் செய்துள்ளான். விமானம் தரையிறங்கும் போது வேலியின் அருகே குதித்துள்ளான். இதில் சிறுவன் எந்த காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறான். இதுகுறித்து விமான நிபுணர்கள் கூறுகையில், விமானம் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும் போது, காற்றில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். அதையும் தாண்டி சிறுவன் உயிர் பிழைத்துள்ளது அதிசயம் என்றனர்.
தற்போது இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment